திக்கோடை பாடசாலையில் அறுவடை விழா

(பழுகாமம் நிருபர்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேஷா மகா
வித்தியாலயத்தில் பாடசாலை மரக்கறித்தோட்டம் செய்கை பண்ணப்பட்டு அதனுடைய விளைச்சல் கடந்த திங்கட்கிழமை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலை ஆசிரியர் சு.வினோதரனால் மாணவர்களின் பங்களிப்புடன் இத்தோட்டம் செய்கை பண்ணபட்டமை குறிப்பிடத்தக்கது. இங்கு கத்தரி, மிளகாய்,  சிறகவரை, கறிமிளகாய் போன்ற போன்றவை பயிரிடப்பட்டது. இவ்வாசிரியர் ஏனைய ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுகின்றமை பாராட்டத்தக்கது.