கல்லடி பாலத்தில் ஜோடி பாய்ந்ததாக பரபரப்பு –உண்மையை தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆண்பெண் ஜோடியொன்று குதித்ததாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பிற்பகல் கல்லடி பாலத்தில் இருந்து ஆண்பெண் ஜோடியொன்று குதித்ததாக இனந்தெரியாதவர்களினால் பரப்பப்பட்ட தகவலையடுத்து பெருமளவானோர் கல்லடிப்பாலத்தினை நோக்கி படையெடுத்துவந்ததை காணமுடிந்தது.

எனினும் இது தொடர்பான உறுதியாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.