சின்ன உப்போடை சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு சின்ன உப்போடை தூய சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா  கொடியேற்ற நிகழ்வு இன்று  மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை இயேசு சபை துறவி  அருட்பணி லோறன்ஸ் அடிகளாரின்  தலைமையில்   நடைபெற்றது  


ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும் , விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .

எதிர்வரும் 30.04.2018  திங்கள்கிழமை  மாலை புனிதரின் திரு உருவ பவனியும் தொடர்ந்து ஆலயத்தில் விசேட திருப்பலியும் ,நற்கருணை வழிபாடுகளும்  இடம்பெறவுள்ளது  

எதிர்வரும் 01.05.2018  செவ்வாய்கிழமை  காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலியும் அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன்  ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .