புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான தேர்த்திருவிழா


  

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும்  மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா  அடியார்கள் புடை சூழ  இன்று கோலாகலமாக  நடைபெற்றது .


மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான  மகோற்சவ பெருவிழா  கடந்த 20 ஆம்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய மஹோற்சவகாலங்களில்  பிரதம குரு வேதாகம பிரதிஷ்டா பூசனம்  சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள்  தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா நடைபெற்றது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை  மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா  அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .
ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை  மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளது.