கல்லடி பாலம் அருகில் இனந்தெரியாதவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கல்லடி பாலம் அருகாமை பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆண் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் 

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுககுற்பட்ட கல்முனை பிரதான வீதியின் கல்லடி பாலம் அருகாமை கடை தொகுதி  பகுதியில் சுமார் 45-50 வயது மதிக்க தக்க அடையாளம் காணாத ஆண் ஒருவரின்  சடலம் இன்று நண்பகல்    மீட்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

சடலமாக மீட்கப்பட்ட நபரின் சடலம் பொலிசாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

குறித்த நபரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை  மட்டக்களப்பு  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.