சற்று முன் தேற்றாத்தீவில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து சேதம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வளியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்த இச் சம்பவம்மானது இன்று(15.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 08.15 மணியளவில் இடம் பெற்றது.

இவ் தீ விபத்து மோட்டார் சைக்கிளில் எற்பட்ட எரிபொருள் கசிவு காரணம் என்று குறித்த வாகனத்தின் சாரதியினால் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளினை தீயினை அயலவர்களினால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.குறித்த மோட்டார் சைக்கிள் பகுதியளவில் தீ கருகியது. இவ் தீ விபத்தில் காயம் எதும் இன்றி உயிர் தப்பினர்.