உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர் திருக்குறள் மேதையின் வாழ்வியல் பயிற்சி


(லியோன்)

உலகத் தமிழர்களில் ஓர்  அதிய மனிதர் “வெற்றி நிச்சயம் புகழ் “நினைவாற்றல் மன்னர் பதினாறு கவனகர்  சிவயோகக்கலாநிதி  இராம .கனகசுப்புரத்தினம் திருக்குறள்  மேதையின் ஒருநாள் வாழ்வியல் பயிற்சி மட்டக்களப்பு  நடைபெற்றது .

திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்து ஞானவேல் பிரதிஷ்டைக்கு  சிறப்பு அழைப்பின் பேரில் இந்தியாவிலிருந்து  வருகை தந்த உலக அதிய மனிதர் திருக்குறள் மேதை 16 கவனகர் இராம கனக சுப்பு ரத்தினத்தின்  ஒருநாள் வாழ்வியல் பயிற்சி மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது .

சைவ சித்தாந்தம் கூறும் சிவரகசியங்கள் , ஆரோக்கியமாக வாழ , கர்மவினை நீங்க , ஈசனை அடைய , வாழ்வில் வெற்றி பெற , தினமும் செய்யவேண்டிய வழபாடு , பயிற்சிகள் , தியானமுறைகள், சித்தர்களின் வாசியோகம் , மனித மூளையின் ஆற்றல்கள் போன்ற நுற்பங்கள்  அடங்கிய வாழ்வியல் பயிற்சியாக நடைபெற்றது

இந்த வாழ்வியல் பயிற்சி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் , கல்வி தினக்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்