சிவானந்தா விளையாட்டு கழகத்தின் கலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தினால் சித்திரைப்புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடாத்தப்பட்டது.

கல்லடி,உப்போடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் சாண்டே எஸ்.இராஜரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கலாசார விளையாட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான தி.ஸ்ரீஸ்கந்தராஜா,பி.பூபாலராஜா மற்றும் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ்,சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் த.யசோதரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா ஸ்ரீசித்திவிநாயகர்,கண்ணகியம்மன் ஆலய தலைவர் செ.உருத்திரமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் வயது ஆண்பெண் வேறுபாடுகளின்றி பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.