சமாதானத்தையும் ,சகவாழ்வையும் ஏற்படுத்தும் விழிப்புணர்வு வீதி நாடகம்


(லியோன்)

மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு ஏற்பாட்டில் “சமாதானம் ,சகவாழ்வு “ எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு  வீதிநாடகம் மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தையும் ,சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் கரிட்டாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை எலக்ஸ் ரொபட்  தலைமையில் “சமாதானம் மற்றும் சகவாழ்வு “ எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு  வீதிநாடகம் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்றது .

நடைபெற்ற விழிப்புணர்வு  வீதி நாடக நிகழ்வில் கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள் கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லடி திருச்செந்தூர் கிராம மக்கள் கலந்துகொண்டனர்