(லியோன்)
மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு
ஏற்பாட்டில் “சமாதானம் ,சகவாழ்வு “ எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு வீதிநாடகம் மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தையும் ,சகவாழ்வையும் ஏற்படுத்தும்
வகையில் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட்
நிறுவனத்தின் சமாதான பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் கரிட்டாஸ் எகெட்
நிறுவன இயக்குனர் அருட்தந்தை எலக்ஸ் ரொபட் தலைமையில் “சமாதானம்
மற்றும் சகவாழ்வு “ எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு வீதிநாடகம் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்
பகுதியில் நடைபெற்றது .
நடைபெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வில் கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள்
கரிட்டாஸ் எகெட் நிறுவன சமாதான பிரிவு
உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லடி திருச்செந்தூர் கிராம மக்கள் கலந்துகொண்டனர்