ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான தீர்த்தோற்சவம்


 லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும்  மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது
.

காலை ஆலய பிரதம குரு வேதாகம பிரதிஷ்டா பூசனம்  சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள்  தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால விசேட யாக பூசை  மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது .

கடந்த 20 ஆம்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் தீர்த்தோற்சவம் அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் நடைபெற்றது .

மாலை ஆலயத்தில் நடைபெறவுள்ள உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது