ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்


   (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மஹோற்சவம்  இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று  மாலை மட்டக்களப்பு, வன்னியார்  வீதியிலுள்ள  ஸ்ரீ அனுமார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை  கொண்டு வரப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஆலயத்தில் நடைபெற்றது

தேவஸ்தான வருடாந்த  மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு  மஹோற்சவ பிரதம குரு வேதாகம பிரதிஷ்டா பூசனம்  சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள் தலைமையில் இன்று காலை  இடம்பெற்ற விசேட யாக பூஜை மற்றும் விநாயகர் வாளிபாடுகளுடன் கொடியேற்றம் இன்று நடைபெற்றது .

கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை நடைபெற்று ,சுவாமி உள் வீதியுலா வருதல் நடைபெற்றது .

ஆலய மஹோற்சவத்தின் எதிர்வரும் 28 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது