மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு வழிபாடுகள்

தமிழ் -சிங்கள விளம்பி சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட பூஜைகள் வழிபாடுகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றன.

துமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

குpழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்று சனிக்கிழமை முதல் மாமாங்;கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டில் நிலையான சமாதானம் வேண்டியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆசிவேண்டியும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

விசேட பூஜையினை தொடர்ந்து ஆலய பரிபாலனசபையினருக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் அடியார்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த பூஜைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.