மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு. கயிறுழுத்தல் கன்னன்குடா கண்ணகி வெற்றி.


30 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2018,  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகமும் கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகமும் இறுதிப் போட்டியில் பலப்பரிட்சை நடாத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கன்னன்குடா கண்ணகி இளைஞர்கழக அணியினரின் ஒருமித்த பலமிக்க செயற்பாடு அந்த அணியை வெற்றி பெறச்செய்தது.

இந்த போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

2018 வருடத்திற்கான மண்முனை மேற்கு சம்பியனாக கன்னன்குடா கண்ணகி இளைஞர்கழகம் முன்னிலை பெறுகிறது.

கடந்த வருடத்திலும் (2017) கண்ணகி இளைஞர்கழக அணி மண்முனை மேற்கு பிரதேசத்திற்கான சம்பியனாக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.