மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.



பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கான  எதிர்வரும் 16.04.2018ம் திகதியிலிருந்து இடம்பெற இருக்கும்  நேர்முகத்தேர்விற்கு பெயர் விபர பட்டியலில் பெயர்கள் வெளியிடப்படாத, விண்ணப்பிக்க தவறிய, 2016.11.31 இற்கு முன்னர் பட்டம்பெற்ற பட்டதாரிகள் அனைவரது தகவல்களையும் மாவட்டச் செயலகத்தினர் தம்மிடம் கோரியுள்ளார்கள். 

எனவே 2016.11.31 இற்கு முன்னர் பட்டம்பெற்று நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படாத பட்டதாரிகள், விண்ணப்பிக்க தவறிய பட்டதாரிகள் அனைவரும் நாளையதினம் 10.04.2018 காலை 9.00மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு பட்டச்சான்றிதழ் பிரதி, மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிகளுடன். உடனடியாக வருகைதந்து தங்களது பதிவுகளை மேற்கொள்ளும்படி பணிவுடன் மாவட்ட பட்டதாரி சங்கத்தினர்  வேண்டிக்கொள்கின்றனர்.

மிகமுக்கிய குறிப்பு:- காலை 10 மணிக்கு முன்னதாக தகவலை வழங்கும்படி மாவட்டச்செயலகத்தினர் வலியுறுத்தியுள்ளமையால் பட்டதாரிகள்  காலை 9 மணிக்கு வருகைதரவும். தங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடின் சங்கத்தினர் பொறுப்பல்ல.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம்.
தொடர்புகளுக்கு:-0752150611.