மகாஜனக்கல்லூரியில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு சந்தை –தமிழர்களால் தமிழர்களுக்கு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அனைத்தையும் ஒரே கூடையின் கீழ் பெற்றுக்கொள்ளும் வகையிலான பொருட்களின் கண்காட்சி மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த சந்தை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முற்றுமுழுதாக தமிழர்களின் உற்பத்தி பொருட்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆடைகள் மற்றும் வீட்டு பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் சித்திரைப்புத்தாண்டை சிறப்பிக்க இந்த தமிழர்களிடம் பொருள் கொள்வனவினை செய்து உதவுமாறு அழைக்கப்பட்டுள்ளது.