கபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (20.04.2018) நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டியில் பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

கன்னங்குடா பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்
கன்னன்குடா கண்ணகி இளைஞர்கழகத்தை தமது திறமையால் வீழ்த்தி பருத்திச்சேனை கிழக்கொளி இளைஞர் கழகம் 2018 ம் வருடத்திற்கான சம்பியனாக வெற்றிவாகை சூடிக் கொண்டது.

  கடந்த    2017 ம் வருடத்தில் சம்பியனாக கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.