மட்டு - இளைஞர்களின் சித்திரை புதுவருட கலை ,கலாசார நிகழ்வு


(லியோன்)

சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் முதல் முறையாக  பாரம்பரிய கலை கலாசார  , பண்பாட்டு நிகழ்வுகளும் , விளையாட்டு நிகழ்வுகளும் நிறைந்த சித்திரை புதுவருட நிகழ்வு மட்டக்களப்பு  கல்லடி பாலம் மாநகர சிறுவர் விளையாட்டு திடலில் நடைபெற்றது .


சித்திரை புதுவருட  கலாசார விளையாட்டு நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலாசார நடன நிகழ்வுகளும்  ,தலையணை சமர் முட்டி உடைத்தல்  ,கயிறு இழுத்தல் , வினோத உடை  என  எமது கலாசாரத்தை நினைவு படுத்தும் பல வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன \
.
இந்த நிகழ்வுகளில் பங்குபற்ற வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன

இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் குழநாயகம் மற்றும்  மாநகர உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்