காணாமல் போனதாக தேடப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்பு


(லியோன்)

மட்டக்களப்பு  இருதயபுரம்  பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்  நேற்று இரவு  முதல் காணாமல் போயுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு  தேடப்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் 
 

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியை   சேர்ந்த  தங்கவேல் ஜெயராஜ்  (வயது 49) என்ற குடும்பஸ்தரே இன்று மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை  வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர் .

குறித்த குடும்பஸ்தர் வாகன சாரதியாக தொழில் புரியும் நபர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை  எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்
சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை  மட்டக்களப்பு  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்