ஈச்சந்தீவு கிராமத்தில் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா



(S.t)

மட்டக்களப்பு - ஈச்சந்தீவு கிராமத்தில் ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகமும்   , உதயசூரியன் இளைஞர் கழகமும் இணைந்து இன்று (14/04/2018)
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பல பாரம்பரிய மற்றும் நகைச்சுவை விளையாட்டுக்களை நடாத்தி இருந்தார்கள்.
இந்த விளையாட்டு நிகழ்வுகள் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விளையாட்டு நிகழ்விற்கு
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ செ. சண்முகராஜா ,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் திரு. சிறிதரன் ,
பிரதேச கலாசார உத்தியோகஸ்தர்
திரு.மு.சிவானந்தராசா
ஆகியோர் வருகை தந்திருந்தனர்.