சியபத பினான்சி கிளை நிறுவனத்தினால் அரசடி தீவு இல்ல மாணவர்களுக்கான உலர்வுணவு வழங்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட சியபத பினான்சி கிளை நிறுவனத்தினால் கொக்கட்டிச்சோலை அரசடி தீவு சக்தி மகளிர் இல்ல மாணவர்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது   
சியபத பினான்சி மட்டக்களப்பு கிளை நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வாழ்வாதார உதவிகளையும் , பல சமூக பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சியபத பினான்சி மட்டக்களப்பு கிளை முகாமையாளர் டி. பிரபாகரன் ஆலோசனைக்கு அமைவாக நிறுவன உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அரசடி தீவு சக்தி மகளிர் இல்ல மாணவர்களுக்கு உலர்வுணவு பொதிகள்  வழங்க வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில், நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்