(லியோன்)
அன்னை பூபதியின் நினைவாக எதிர் வரும் 18ஆம்
திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட
இறுதி சுற்றுப்போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக
மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தொடர்பாக தெளிவு படுத்தும்
ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக எதிர்
வரும் 18ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்படவுள்ள
உதைப்பாந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி மற்றும் 19 ஆம்
திகதி அன்னையின் நினைவாக மட்டக்களப்பு
கல்லடி – நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதிக்கு
அருகில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள
உண்ணாவிரதம் தொடர்பாக
ஊடகங்களுக்கும் , பொதுமக்களுக்கும் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொஸ் ஒப் மீடியா அலுவலகத்தில் நடைபெற்றது .
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி
அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில்
முன்னெடுக்கின்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ள அன்னையின் நினைவு விசேட நிகழ்வில் நிகழ்வில்
பிரதேச மக்கள் .புத்திஜீவிகள் , மாணவர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் ,இளைஞர்கள் என அனைவரும்
கலந்துகொண்டு , நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்காக கொண்டு
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டத்தாக , தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே .பிரபாகரன்
தெரிவித்தார்
இந்த ஊடகவியலாளர்
சந்திப்பு நிகழ்வில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே .பிரபாகரன் , தேசத்தின் வேர்கள் அமைப்பின்
சிரேஷ்ட ஆலோகர் பி . சின்னத்துரை ,தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்