விளாவட்டவான் கிராமத்தில் ஊஞ்சல் விழா -2018



(S.t)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்களில் பாரம்பரிய நிகழ்வுகள் இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகின்றது.

அந்த வகையில் விளாவட்டவான் கிராமத்தில் ஸ்ரீ கணேஷா இந்து இளைஞர் மன்றத்தினரால் ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் ஆலய முன்றலில் சித்திரை புத்தாண்டு தினத்தில் ஊஞ்சல் போடப்பட்டு ஊஞ்சல் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

இந்த ஊஞ்சல் விழா தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.