ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்காக முழு மூச்சுடன் செயற்படும் மட்டக்களப்பு இளைஞர்கள்

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆரையம்பதி இளைஞர்கள் ஏற்பாடுசெய்த கையெழுத்துப்பெறும்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரையம்பதியில் நடைபெற்றது.

ஆரையம்பதி பொதுச்சந்தைக்கு முன்பாக நடைபெற்ற இந்த கையெழுத்துப்போராட்டத்தில் இனமத வேறுபாடுகளின்றி பல்வேறுதரப்பினரும் கையெழுத்துக்களை பதிவுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் கையெழுத்துப்பெறும்போராட்டம் படுவான்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்துப்போராட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு கையெழுத்துப்போராட்டத்தினை நடாத்தினர்.