வீட்டினை இலக்குவைத்து வெடி குண்டுகளை வைத்தவர் நபர் சடலமாக மீட்பு


(லியோன்)

 மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்குவைத்து  வெடி குண்டுகளை  வைத்தவர் நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்  



மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இரண்டு வீட்டினை இலக்குவைத்து வெடி குண்டுகளை வைத்த நபர் மட்டக்களப்பு டச்பார் நாவலடி முகத்துவாரம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று  மீட்கப்பட்டுள்ள்ளதாக பொலிசார் 

ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியில் இரண்டு வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் குண்டுகளை வைத்த நபரை காத்தான்குடி  பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு டச்பார் நாவலடி முகத்துவாரம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று  மீட்கப்பட்டுள்ள்ளதாக பொலிசார் 

குறித்த குண்டுகளை பொருத்தியவர்  ஆரையம்பதி 3  கதிர்காமம் வீதியை சேர்ந்த ஆனந்தராஜா பிரியராஜ் வயது 28  என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் ,

சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர் .