கிரான் சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் கிரான் கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா நேற்று புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றத.

இந்த பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா பிரதம சிவச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியர் தலைமையில் இடம்பெற்றது.

நேற்று ஆரம்பமாகிய பிரமோற்வச பெருவிழாவனது 11 திருவிழாக்களுடன் எதிர்வரும் 17.03.2018 சனிக்கிழமை காலை தீர்த்தோற்வசவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.

ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு திருவிழாக்களும் குடிப்பரையைக் கொண்டமைவதுடன் 7ம் திருவிழாவான எதிவர்வரும் 13.03.2018 திங்கள் கிழமை வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுசிறப்புமிக்க இந்த ஆலயமானது தமிழர்களின் கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் சுமந்தாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.