தலைமைத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


 (லியோன்)

 “ஒரு சமுகத்தின் அடித்தளம் அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பப் படுகின்றது “ எனும் தொனிப்பொருளில் உங்களுக்கு நீங்களே தலைவராக இருங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாம் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று மாணவர்களுக்கான தலைமைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் ,வளவாளருமான எ .ஜெகநாதன் ஒழுங்கமைப்பில் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய தரம் 10 மாணவர்களுக்காக மாணவ தலைமைத்துவ பயிற்சிகள் மூன்று நாள் நடத்தப்பட்டு இறுதி நாளான இன்று மாணவ தலைமைத்துவத்திற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது .

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய அதிபர் திருமதி என் தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக விசேட கல்வி இணைப்பாளர் எம் .தயானந்தன் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் ஜி கிருஷ்ணமூர்த்தி , வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் திருமதி .கே .அன்ரன் ஜோன் ,மற்றும் பாடசாலை பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர் .