அழகுக்கலை அமைப்பின் இரண்டாவது கலந்துரையாடல்


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை  நிபுனர்களுடனான இரண்டாவது கலந்துரையாடல் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது



இலங்கையில் அதிகூடிய வருமானத்தை ஈட்டு தரும் அழகுக்கலை  தொழிலை நேர்த்தியாகவும் ,சட்ட ரீதியாகவும் செயல்படுத்துவதற்கு கூட்டுறவு சங்கம் ஊடாக பதிவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில்
அழகுக்கலை தொழிலை மேம்படுத்துவதற்கு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அழகுக்கலை தொழிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேம்படுத்துவதற்கான முதலாவது கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அழகுக்கலை அமைப்பு  ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஆரம்பித்து வைக்கப்பட்ட அழகுக்கலை அமைப்பின் இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது இதன் போது அமைப்பின் யாப்பு , அமைப்பின் சுலோகம் (லோகோ) அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் , தொழிலுக்கான வங்கி கடன் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

 நிகழ்வில் அரச வர்த்தக முதலீட்டு வங்கி முகாமையாளர் கே .கோகுலராமன் , உதவி முகாமையாளர் எஸ் .வேனுகாந்தன் ,மாவட்ட செயலக முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான எஸ் .வினோத் .திருமதி .கே .தாரணி , மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை அமைப்பின்  தலைவர் திருமதி .எஸ் .வனிதா ,,செயலாளர் செல்வி . கே .சுபாசினி , நையிட்டா நிறுவன பரிசோதகர் என் .இராசமோகன் மற்றும் மாவட்ட  அழகுக்கலை அமைப்பின் நிபுணர்கள் கலந்துகொண்டனர்