வாகரையில் பிரதேச சபை உறுப்பினர் முன்னோடி இளைஞராக கெளரவிப்பு

(சசி துறையூர்) வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் பொருளாளரும், இலங்கை இளைஞர் கழகங்களின் தேசிய  சம்மேளன முன்னால் பிரதிநிதியுமான,  கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு உறுப்பினராக வெற்றி பெற்ற T.சத்தியநாதன் முன்னோடி இளைஞராக  பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

கடந்த (03.03.2018) சனிக்கிழமை  வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்க்கான,  பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவிற்க்கான பொதுக்கூட்டத்தின் போது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி AW.இர்ஷாத் அலி   அவர்களினாலே இந்த கெளரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜேசுதாசன் கலாராணி,     முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினா் தமிழ்ச் செல்வன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.