மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததான நிகழ்வு…

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(10) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் மற்றும் சீலோம் வைத்தியசாலை ஆகியன இணைந்து இவ் இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்யததுடன் வைத்திய கலாநிதி திருமதி கிருஸ்ணவேணி சுஜீந்திரன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

அத்துடன், இதன்போது கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இளைஞர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாதுகாப்பு படையினர், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபம் உட்பட, சீலோம் வைத்தியாசலை, இருதயபுரம் இருதயநாதர் மண்டபம் மற்றும் தன்னாமுனை மியானி நகர் மண்டபம் போன்ற இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் ஆகியோhர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.