கிரானில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சூரியகுமாரன் தெரிவித்தார்.

நேற்று இரவு வரையில் கிரான் பிரதேசத்தில் 80.6மில்லிமீற்றர் பழை பதிவாகியுள்ளதுடன் அதற்கடுத்தாக உன்னிச்சை பகுதியில் 44மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் 26.4மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பாசிக்குடா பகுதியில் 36.5மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளதுடன் தாழ் நிலங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கும் நிலமை காணப்படுகின்றது.