பெரிய வெள்ளி சிலுவைப்பாதை தியான நிகழ்வுகள்


(லியோன்)

உலகில் உள்ள கிறிஸ்தவர்களின்  புனித தினமாக கருதப்படும் பெரிய வெள்ளி  சிலுவைப்பாதை  தியான நிகழ்வுகள் பெரிய வெள்ளி அன்று  சிறப்பாக நடைபெற்றது 

புனித பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் மிகவும் பக்தி பூர்வமாக சிலுவைப்பாதை  தியான நிகழ்வுகள் இடம்பெற்றது .


பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும்  
பெரிய வெள்ளி காலை திருச்சிலுவைப்பாதை தியான நிகழ்வுகள் நடைபெற்றன.


மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள்  பேராலயம், தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம் மற்றும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயம், புளியடிகுடா புனித செபஸ்தியார் ஆலயம் ,மாமாங்கம்சகாயபுரம்புனிதசதாசகாயஅன்னைஆலயம்ஆகிய ஆலயங்களில்   திருச்சிலுவை பாதை நிகழ்வுகள்  இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது .


இந்த புனித தியான திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள்வுகளில் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர் .