புனித பெரிய வெள்ளி
தினத்தை சிறப்பிக்கும் வகையில்
மட்டக்களப்பு தேவ சபை எ ஜி ஒ ஏற்பாட்டில் “ உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “
எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு தேவ சபை போதகர் ராஜரட்ணம் தலைமையில் மாபெரும்
இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு தேவ சபை
எ ஜி ஒ ஆலயத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில்
நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான முகாம் காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .
இந்த இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த
வங்கிப்பிரிவு வைத்தியர் ஹரிசாந்த் ,.வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , ஆலய
போதகர்கள் ,ஆலய ஊழியர்கள் என பலர்
கலந்துகொண்டனர்