தேவ சபை எ ஜி ஒ ஏற்பாட்டில் புனித பெரிய வெள்ளி தின இரத்ததான முகாம்

 (லியோன்)  


புனித பெரிய வெள்ளி தினத்தை  சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு தேவ சபை  எ ஜி ஒ ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு தேவ சபை போதகர் ராஜரட்ணம் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு   தேவ சபை  எ ஜி ஒ ஆலயத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமில்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்   ஹரிசாந்த் ,.வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , ஆலய போதகர்கள் ,ஆலய ஊழியர்கள்  என பலர் கலந்துகொண்டனர்