தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்


(லியோன்)


மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன  விபத்தில் இருவர் பலத்தகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


குறித்த கணவன் மனைவி இருவரும் மட்டக்களப்பு நகரில் இருந்து திருகோணமலை – வாழைச்சேனை  பிரதான வீதியின் தாண்டவன்வெளி பகுதியில் மோட்டார் சைக்களில்  பயனித்து கொண்டிருக்கையில்  பின்னால் வந்த கார் மோட்டார் சைக்களுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்தில் காயமடைந்துள்ள கணவன் மனைவி  இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பான  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்