(லியோன்)
மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்தகாயங்களுக்குள்ளான
நிலையில் மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி
பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி இருவர்
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவிக்கின்றனர் .
குறித்த கணவன் மனைவி இருவரும் மட்டக்களப்பு நகரில் இருந்து திருகோணமலை
– வாழைச்சேனை பிரதான வீதியின்
தாண்டவன்வெளி பகுதியில் மோட்டார் சைக்களில் பயனித்து கொண்டிருக்கையில் பின்னால் வந்த கார்
மோட்டார் சைக்களுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்துள்ள கணவன் மனைவி இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பான
விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்