(லியோன்)
உலகில் உள்ள கிறிஸ்தவர்களின் புனித தினமாக கருதப்படும் இயேசு கிறிஸ்து நாதர்
சிலுவையில் அறையப்பட்ட புனித பெரியவெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும்
உள்ள தேவாலயங்களில் திருச்சிலுவைப்பாதை நிகழ்வும் விசேட திருப்பலிகளும் இடம்பெற்றது .
இந்த புனித பெரியவெள்ளி தினத்தை சிறப்பிக்கும்
வகையில் மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள அனைத்து
தேவாலயங்களிலும் திருச்சிலுவைப்பாதை தியான
நிகழ்வுகளும் மாலை விசேட திருப்பலிகளும் இடம்பெற்றன
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பெரிய வெள்ளி விசேட
திருப்பலி ஆராதனை மட்டக்களப்பு மறை மாவட்ட
ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது