(லியோன்)
மட்டக்களப்பு ,மாமாங்கம் சகாயபுரம் புனித சதா சகாய அன்னை தேவாலயத்தின் “உனக்காக மரித்தேனே “ இயேசு
கிறிஸ்துவின் திருப்பாடுகள் நிகழ்வு கூழாவடி
டிக்கோ விளையாட்டு மைதானத்தில் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்த மக்களின் பாஸ்கா தவக்காலத்தின் இறுதி வாரமான
பெரிய வெள்ளி அன்று நடைபெற்று வரும்
நிகழ்வுகளின் கீழ் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
யேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் வைகையில் அவரின் பிறப்பின் பெருமையினையும் ,திரு சிலுவை பாடுகளையும் அவரின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் “உனக்காக மரித்தேனே “இந்த
திருப்பாடுகள் நாடக காட்டி நிகழ்வாக நடைபெற்றன.
புனித சதா சகாய
அன்னை ஆலய பங்கு தந்தை திருச்செல்வம் அடிகளாரின் தலைமையின் கீழ் பங்குமக்களின்
ஏற்பாட்டில் மிக நீண்ட மேடை அமைக்கப்பட்டு இந்த திருப்பாடு நிகழ்வுகள்
அரங்கேற்றப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பங்கு தந்தையின் ஜெப வழிபாடுகளுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்டி
அடிகளாரின் ஆசியுரையுடன் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் நடிப்பின் காட்சி படுத்தல் நிகழ்வுகள்
ஆரம்பமானது.
இந்த திருப்பாடுகள் நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக
மட்டக்களப்பு மாவட்டத்தி;ன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்கள்
கலந்துகொண்டனர்.