கண்டி ,திகன சம்பவத்தை கண்டித்து காத்தான்குடியில் ஹர்த்தால்


(லியோன்)


கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தகர்கள் இன்று ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .



மட்டக்களப்பு காத்தான்குடி  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி வர்த்தர்கள்  கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து தமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து வர்த்தக நிலையங்களை மூடி இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டன


காத்தான்குடி வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவை வழங்கு உள்ளனர் .


காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் ரோந்து நடவடிக்கையிலும்  ஈடுபட்டனர்