நேற்று செவ்வாய்க்கிழமை (06.03.2018 )
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகத் தெரிவுக்கான பொதுக்கூட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கோறளைப்பற்று வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவுகள் நடைபெற்றன.
திரு த.சபியதாஸ் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாடு மற்றும் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு உதவி பிரதேச செயலாளர் நிருபா பிறிந்தன் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜேசுதாசன் கலாராணி ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து இளைஞர் கழகங்களினதும் நிருவாகிகளான இளைஞர்யுவதிகள் பலரும் இக்கூட்டத்தில் கொண்டனர்.