“வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் “
எனும் தொனிப்பொருளில் பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின்
ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பெண் தொழில்
முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின்
கண்காட்சியும் விற்பனையும் அதனுடன் இணைந்ததாக மகளிர் தின நிகழ்வும் மண்முனை
வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் (20) நடைபெற்றது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள்
காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது .
இந்நிகழ்வில் உதவி பிரதேச
செயலாளர் எஸ் .யோகராஜா ,பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக
உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பெண்
சுயதொழில் முயற்சியாளர்கள் , சமுர்த்தி பயனாளிகள் ,பொதுஅமைப்புக்களின்
அங்கத்தவர்கள் , என பலர் கலந்துகொண்டனர் .