ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை


(லியோன்)

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கையெழுத்து பெறும் வேட்டையில்  11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமது கையெழுத்தினை பதிவு செய்துள்ளனர்
   .

மட்டக்களப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாட்டில் சமைய தலைவர்களின் ஒத்துழைப்புடன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  விடுதலை செய்யுமாறு கோரி  மாபெரும் கையெழுத்து பெறும் நடவடிக்கை  இரண்டு நாட்களாக  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது .

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு நகரில்  இடம்பெறுகின்ற இந்த கையெழுத்து பெரும் நடவடிக்கையில் அரசியல் வாதிகள் மதத்தலைவர்கள் , இளைஞர்கள் , பொதுமக்கள் ,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு தமது அடையாளத்தை தெரிவிக்கும் வகையில் கையெழுத்தினை பதிவு செய்தனர்