(லியோன்)
காத்தான்குடியில் காணாமல்போன வர்த்தகர் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
காத்தான்குடியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி மூன்றை சேர்ந்த எ எல் எம் முபாறக் (வயது 36) இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று மாலை வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு .
காத்தான்குடி பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை கல்லடி ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி நொச்சிமுனை பகுதியில் பாதணிகள் தயாரிக்கும் தொழில்சாலையினை நடத்தி செல்லும் உரிமையாளர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
காத்தான்குடியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி மூன்றை சேர்ந்த எ எல் எம் முபாறக் (வயது 36) இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று மாலை வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு .
காத்தான்குடி பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை கல்லடி ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி நொச்சிமுனை பகுதியில் பாதணிகள் தயாரிக்கும் தொழில்சாலையினை நடத்தி செல்லும் உரிமையாளர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன