நாவற்குடா சிவன் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு நாவற்குடா ஆலயத்தின் புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஆலய வளாகத்தால் நடைபெற்றது


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்  ஆலயம் தாந்தாமலை ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ எம் .கே .சச்சிதானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளும் ,அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது .

நாவற்குடா சிவன் ஆலய திருப்பணிச்சபையின் ஏற்பாட்டில் ஆலயத்திற்கான வசந்தமண்டபம் , தெற்கு வாசல் கோபுரம் , அம்மன், ,முருகன், ,நவக்கிரகம் , நாகபிறான்  நடராஜர் ஆகிய சிற்றாலயங்களும் , ஆலய சுற்றுமதில் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது .

நாவற்குடா சிவாலயத்தின்  அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல்லை யாழ் உறும்புராய் சிவதர்ம சாஸ்தா ஆலய ஆதீனம் பிரம்ம ஸ்ரீ தாணு வாசுதேவ  சிவாச்சாரியாரும் மற்றும் ஆலய சிற்றாலயங்களுக்கான அடிக்கல்லை  ,அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன்  குருக்கள், திருப்பெருந்துறை கொத்துகுளம் மாரியம்மன் ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ  நாராயண சன்முகநாதக் குருக்கள், மாவட்ட செயலக செல்வ விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்கள், மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஜெகநாதன் குருக்கள்  ஆகியோர் நாட்டி வைத்தனர் .

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் வைத்தியர்  சுந்தரேசன் மற்றும் ஆலய திருப்பணிச்சபையினர் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்