மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி (12.03.2018) திங்கட்கிழமை நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ரி.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் , எஸ்.ஸுரநுதன் பிரதி கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வாகிய அன்றைய தினம், மாணவர்களுக்கிடையிலான திறனாய்வு போட்டிகளும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.
இதன்போது போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் ரி.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் , எஸ்.ஸுரநுதன் பிரதி கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வாகிய அன்றைய தினம், மாணவர்களுக்கிடையிலான திறனாய்வு போட்டிகளும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.
இதன்போது போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.