“அவள் விழித்துக்கொண்டால்” தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு

அவள் விழித்துக்கொண்டால் என்னும் தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் சர்வதேச மகளிர் தினம் இன்று வியாழக்கிழமை மாலை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து இன்று மாலை பெண்களின் உரிமையினை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

பெண்களின் அரசியல் உரிமை சமூகத்தில் அவர்களுக்கு உறுதிப்படுத்தவேண்டிய உரிமை மற்றும் மதுபாவனையினை குறைக்கும் வகையிலான கோரிக்கைகள் இதன்போது கோசங்களாக முழங்கப்பட்டன.

கவன ஈர்ப்பு பேரணியானது வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரியாலயம் வந்ததும் அங்கு மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவர் திருமதி செல்வி மனோகர் தலைமையில நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்கத்தின் வடகிழக்கு மாகாண முகாமையாளர் இராஜரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்களின் உரிமைகள் தொடர்பிலும் மகளிர் தினத்தின் சிறப்புகள் தொடர்பிலும் உரைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின் இறுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் மகளிர் பிரகடனம் ஒன்றும் வெளிவிட்டுவைக்கப்பட்டது.