மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக தையல் தொழிற்பயிற்சி மாணவிகளின் கண்காட்சி.

(சசி துறையூர்) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால்    மட்டக்களப்பு, மண்முனை மேற்கு , வவுணதீவு பிரதேச செயலகத்தின் தையல் பயிற்சி நிலையத்தில் தையல் தொழில் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும், வவுணதீவு மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று புதன்கிழமை 21.02.2018  நடைபெற்றது.

கடந்த ஆண்டில் (2017) தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளே இக் கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டனர்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், கிராம சேவகர்களின் நிருவாக உத்தியோகஸ்தர், நிருவாக உத்தியோகஸ்தர்,  சிரேஸ்ட தையல் போதனாசிரியை உட்பட பலர் கலந்து கொண்டனர்.