திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி


 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று பிற்பகல் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர்  எஸ் .தர்மசீலன்    தலைமையில் இடம்பெற்றது.


விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் கலந்துகொண்டார்

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,

இதனை தொடர்ந்து  அதிதிகளினால் தேசிய கொடி, மாகாண கொடி , பாடசாலை கொடி ,விளையாட்டு கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்   இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் தொடர்ந்து  மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள்  ஆரம்பமானது,

நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் ,மாணவர்களின் உடல்பயிற்சி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டுக்களும்  இடம்பெற்றது,
இறுதியாக  வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் ,மாணவர்களுக்கு அதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு  நிகழ்வுகள்  சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் ஹைதரலி மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீஹா வதுற , போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ராஜபக்ஸ, மக்கள் தொடர்பாடல் பொலிஸ்பொறுப்பதிகாரி இலங்கரத்ன மற்றும் பாடசாலை  அபிவிருத்தி  குழு  உறுப்பினர்கள் ,பாடசாலை                         ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள்   என பலர் கலந்துகொண்டனர்