வீதியில் இறங்கிய திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியால மாணவர்கள்


(லியோன்)

ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
.

இதன்கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில்  நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

இதற்கு அமைய மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியாலத்தில்  இரண்டாம்  கட்ட செயல்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது

வித்தியாலய   அதிபர்    வி .குணசீலன் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  நடை பவனியும் , வீதி நாடகமும் இடம்பெற்றது

இந்த விழிப்புணர்வு நடை பவனியாது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி  நாவலடி – திராய்மடு கிராமங்களின்  பிரதான வீதி ஊடாக சென்று மீண்டும் நடை பவனி  பாடசாலையை  வந்தடைந்து 

இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு நடை பவனியில் கலந்துகொண்டதுடன் , பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகங்களும் , விளம்பர இஸ்டிக்கர் ஒட்டப்பட்டு காட்சி படுத்தப்பட்டன .

இந்த விழிப்புணர்வு நடை பவனியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர்  எ .ஜெகநாதன் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் , பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஆர் ரெட்ணகுமார் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்