மாதர் அபிவிருத்தி பயிற்சியாளர்களின் கண்காட்சியும் ,விற்பனையும்


(லியோன்)


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும்
,பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு .மட்டக்களப்பில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு  வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது . 

அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை  நிறைவு செய்துகொண்டு  வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட  பொருட்களின்  கண்காட்சியும் , விற்பனையும்  மற்றும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு   இருதயபுரம் கிழக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று  நடைபெற்றது .

மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை திருமதி நந்தினி அன்ரனி ராஜா  ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி  திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்ததுடன்  தையல் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே .மோகன் பிறேம்குமார்  , சிரேஷ்ட தையல் போதனாசிரியர்  திருமதி  என் . ரவிச்சந்திரன் ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் மற்றும் இருதயபுரம்கிழக்கு ,ஜெயந்திபுரம் , பாரதிபுரம் , வீச்சுகல்முனை  , புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும் கலந்துகொண்டனர்

















.