(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு .மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு .மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி
திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட
டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி
கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது .
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பயிற்சி
நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும்
யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட பொருட்களின் கண்காட்சியும் , விற்பனையும் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்
நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .
மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான
போதனாசிரியை திருமதி நந்தினி அன்ரனி ராஜா ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி
திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்ததுடன் தையல் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு
சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் கே .மோகன்
பிறேம்குமார் , சிரேஷ்ட தையல் போதனாசிரியர் திருமதி
என் . ரவிச்சந்திரன் ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி
. சுகந்தினி ஜெகதர்சன் மற்றும் இருதயபுரம்கிழக்கு ,ஜெயந்திபுரம் , பாரதிபுரம் , வீச்சுகல்முனை , புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாதர் கிராம
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும்
கலந்துகொண்டனர்
.