புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2018 இல்ல விளையாட்டுப் போட்டி

(லியோன்)

மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  புனித  சிசிலியா பெண்கள்  தேசிய பாடசாலையின் 2018 மெய்வல்லுனர்  திறனாய்வு  இல்ல விளையாட்டுப் போட்டி (30)  மாலை       மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில் பாடசாலை  அதிபர் அருட்சகோதரி அருள்மரியா  தலைமையில்  நடைபெற்றது


இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் கலந்துகொண்டார்

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை  அணிவித்து அழைத்து வரப்பட்டனர்அதனை தொடர்ந்து  தேசிய கொடிபாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு  நடைபெற்றது

இதனை  தொடர்ந்து  இல்ல  மாணவ  தலைவர்களால்  ஒலிம்பிக் சுடர்               ஏற்றப்பட்டுமாணவ  தலைவர்களின்  சத்திய பிரமாண  நிகழ்வுகள்         விளையாட்டு  ஆரம்பமானது விளையாட்டு  நிகழ்வுகளில்  மாணவர்களின் ஓட்டப்போட்டி மாணவர்களின்   உடற்பயிற்சி   வினோத   உடை போட்டி,     மற்றும் பழைய மாணவிகள்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின்  வினோத  விளையாட்டு  நிகழ்வுகளும்     நடைபெற்றது .


இப் பாடசாலை  இல்ல விளையாட்டு போட்டியின்  இறுதி நிகழ்வாக  வெற்றி  பெற்ற   மாணவர்களுக்கு  பரிசில்களும் சான்றிதழ்களும்கேடயங்களும்  வழங்கப்பட்டு  விளையாட்டு  நிகழ்ச்சிகள்  சிறப்பாக நிறைவு பெற்றது.