பாரம்பரிய கலாசார பண்பாட்டு ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு (Video & photos)

(லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட உழவர் திருநாளில்  பாரம்பரிய கலாசார பண்பாட்டு நிகழ்வினை பிரதேச செயலக மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட  ஆவணப்பட வெளியீட்டு  நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் (24)  பிற்பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
. 

மங்கி போயுள்ள பாரம்பரிய கலாசார விடயங்களையும் மத நல்லிணகத்தையும்   நிலை நிறுத்தி அற்றை  எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் விடயமாக ஒழுங்கு செய்யப்பட்ட  விடயமாக இந்த  ஆவணமாக்கப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவதாக ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வின் போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் .   


இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷனி ஸ்ரீகாந்த், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் , மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்