ஆரையம்பதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் வீடு உடைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பகுதியில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீடு நேற்று வியாழக்கிழமை (04-01-2018)இரவு இனந்தெரியாத நபர்களினால் ஊடைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மண்முனைப்பற்று பிரதேசசபையில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் வீடே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு வெளியில் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டதாகவும் வீட்டினுள் பொருட்கள் வீசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் வேட்பாளர் திருமதி சந்திரிகா சோமசுந்தரம் தெரிவித்தார்.

தமக்கு யாரும் எதிரிகள் இல்லாதபோதிலும் தேர்தல் நோக்கம் கொண்டவர்களே தமது வீட்டினை உடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு அவசர பொலிஸ் சேவைக்கு முறைப்பாடுசசெய்யப்பட்டதை தொடர்ந்து காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.